மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு காய்கனி அலங்காரம்

மகர சங்கராந்தி, மாட்டுப் பொங்கல் பெரு விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 200 கிலோ எடையுடைய காய்கனிகளால் அலங்காரம் சனிக்கிழமை காலை செய்யப்பட்டது.

News image
தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு காய்கனி அலங்காரம்
Updated On :16 ஜனவரி 2022, 8:26 am

DIN

தஞ்சாவூர்: மகர சங்கராந்தி, மாட்டுப் பொங்கல் பெரு விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 200 கிலோ எடையுடைய காய்கனிகளால் அலங்காரம் சனிக்கிழமை காலை செய்யப்பட்டது.

கோ பூஜை

கோ பூஜை

இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் 12 அடி உயரம்.  பத்தொன்பதரை அடி நீளம். எட்டேகால் அடி அகலம் கொண்ட மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், மகா நந்திகேசுவரருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகளாலும், இனிப்புகளாலும், செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது.

கோ பூஜை

கோ பூஜை

இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 200 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு செய்யப்பட்ட ஏறத்தாழ 200 கிலோ எடை கொண்ட காய்கனி அலங்காரம்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு செய்யப்பட்ட ஏறத்தாழ 200 கிலோ எடை கொண்ட காய்கனி அலங்காரம்.

பின்னர், மகா நந்திகேசுவரர் முன் கோ பூஜை நடைபெற்றது. இதில் பசு, கன்றுக்குச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பசுவுக்குப் பொங்கல் ஊட்டப்பட்டது.

கோ பூஜை

கோ பூஜை

ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழா கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையாக நடத்தப்பட்டது. இதேபோல நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாகப் பக்தர்களின்றி எளிய முறையில் இவ்விழா நடைபெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.