எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மாமல்லபுரம் 

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
வெறிச்சோடிய மாமல்லபுரம் 
Updated On :16 ஜனவரி 2022, 10:49 am

DIN

காணும் பொங்கல் நாளில் பரபரப்பாக இருக்கும் மாமல்லபுரம், முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவின் 3வது நாள் காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் குடும்பத்துடன் கோயில்கள், சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர் எனச் சென்று மகிழ்ச்சியாக கொண்டாடி பொழுதை கழிப்பது வழக்கம். 

Story image

கரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக திருவிழாக்கள், பண்டிகைகள் வழக்கமான முறையில் கொண்டாடப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என நினைத்த  நிலையில். இந்த ஆண்டும் காணும் பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் முழு ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.  

வழக்கமாக சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த சுற்றுலா இடங்களை கண்டு களித்தும் கடற்கரையில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பார்கள். 

Story image

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் காணும் பொங்கல் தினத்தன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காணப்பட்டது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், செய்தித்தாள், விநியோக கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் செல்கிறது. 

Story image

செங்கல்பட்டு மாவட்டத்தில்  சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டும், முக்கிய சாலைகளில் போலீசார் கண்காணித்து வாகனசோதனைகளில் ஈடுபட்டு வருவதால் நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றுபவர்களையும் வாகனங்களையும் கண்காணித்து வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.