முதுபெரும் தொல்லியல் அறிஞர் ஆர்.நாகசாமி மறைவு

தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞராக பலரால் அறியப்பட்டவர்.
முதுபெரும் தொல்லியல் ஆய்வு அறிஞர் நாகசாமி
முதுபெரும் தொல்லியல் ஆய்வு அறிஞர் நாகசாமி
Published on
Updated on
1 min read

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி (91) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜன.23) பிற்பகல் உயிரிழந்தார். 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி. இவர் தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்து குறிப்பு அறிஞராக பலரால் அறியப்பட்டவர்.

நாகசாமியின் பணிகளைப் பாராட்டி அவரை அங்கீகரிக்கும் வகையில், 2018-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.

இந்திய தொல்லியல் ஆய்வகத்தில், தொல்லியல் துறையில் பயிற்சி எடுத்த ஆர். நாகசாமி, 1959 முதல் 1963-ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார்.

1963 முதல் 1966-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966 முதல் 1988-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனராகவும் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com