எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முழுஊரடங்கில் 492 வாகனங்கள் பறிமுதல்; ரூ.6.26 லட்சம் அபராதம் வசூல் - சென்னை காவல்துறை

நேற்று முழுஊரடங்கு நாளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 ஜனவரி 2022, 8:30 am

DIN

நேற்று முழுஊரடங்கு நாளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தியுள்ளது. 

அதன்படி, நேற்று(ஜன.23) முழு ஊரடங்கு நாளையொட்டி, சென்னை மாநகராட்சியில் 10,000 காவல் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

முழு ஊரடங்கில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றிய 443 இருசக்கர வாகனங்கள், 31ஆட்டோக்கள் 15 இலகுரக வாகனங்கள் மற்றும் 3 இதர வாகனங்கள் என மொத்தம் 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 5,94,100/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 32,000/- அபராதமும் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.