/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக இருந்த அதிகாரி பணியிடை நீக்கம்

பொருள்களின் தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக செயல்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

News image
15d-pongal101429
Updated On :1 பிப்ரவரி 2024, 8:14 am

DIN


தமிழகம் அரசு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்குவதற்காக சில இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களின் தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக செயல்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சில இடங்களில் பொருள்களின் தரம் குறித்த புகார் எழுந்ததால் விரிவான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமான பொருள்கள் வழங்கப்படவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.