திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் பார்த்தசாரதி கோயில். இங்கு யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நரசிம்ம பிரம்மோற்சம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தர்மாதி பீடம் புறப்பாடு, சாலைகளில் திருவீதி உலா என பார்த்தசாரதி கோயில் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பக்த கோடிகள் அவரவர் இல்லத்தில் இருந்து சிறப்பு வழிபாடுகளோடு சுவாமி நரசிம்மர் பெருமாளை வழிபட்டு வணங்கி ஆர்த்தி எடுத்துக் கொண்டனர்.
இரண்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளிய சிங்கர் அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை கருட சேவையும், கோபுர வாசல் தரிசனமும் நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


