சென்னை: சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு மற்றும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்
ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த 7.4.2005 ஆம் ஆண்டு முதல் 31.3.2021 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி (500%) சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள காமராஜ் வீட்டிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லை. புகாரின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுகவில் நிலவி வரும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்த பின்புதான் சோதனை நடத்துகின்றனர். தகுந்த முகாந்திரம் இல்லாமல் எதையும் செய்யவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


