மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை: பணிகள் தீவிரம்

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பிரத்யேக நடைபாதை: பணிகள் தீவிரம்
Published on
Updated on
1 min read


சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சென்னை மக்களின் பொழுதுபோக்கு மையமாக விளங்குவது மெரினா கடற்கரை. இங்கு  கண்ணகி சிலை, மறைந்த முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிகள் உள்ளன. மெரினாவின் இயற்கை கண்டு ரசிக்க நாள்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், மெரினாவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்வதற்கு வசதியாக அவர்களுக்கென பிரத்யேக நடைபாதை அமைக்கு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விவேகானந்தா இல்லம் எதிரே சவுக்கு, கருவேலம் மரங்களைக் கொண்டு 250 நீளம், 3 மீட்டர் அகலத்தில் நிரந்த பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்த பணிகள் விரைவில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com