சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொடா் மழை: வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூலை 2022, 2:28 am

DIN


வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை கடந்த மாதம் தொடங்கி பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. 

இந்நிலையில், கோவை மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்துவரும் தொடா் மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து 630 கன அடியாக அதிகரித்துள்ளது. நொய்யல் ஆற்றுக்கும் வரும் நீா் குளங்களுக்கு திருப்பிவிடப்பட்டு வருவதால் மாநகரில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில்,  இரவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்தது. மேலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வால்பாறை தாலுகாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஜூலை 14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.