சென்னை: செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை திட்டமிட்டள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க சென்னைவரும் வீரர்களுக்கு கரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது.
பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக மருத்துவத்துறை திட்டமிட்டள்ளது.
இதையும் படிக்க: மேற்குவங்கத்தை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கருப்பு - காய்ச்சல்
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் இதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.