சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காவிரி கிழக்கு - மேற்குக் கால்வாயில் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. 

News image
Updated On :16 ஜூலை 2022, 6:36 am

DIN

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம்  தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

Story image

ஆனால், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருப்பதால் நடப்பு ஆண்டில் கால்வாய் பாசனத்திற்கு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது.

Story image

இன்று  முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Story image

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். 

Story image

மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கால்வாய் மதகுகளை உயர்த்தி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார்.

இந்நிகழ்ச்சியில் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், மேட்டூர் நகர திமுக செயலாளர் காசி விஸ்வநாதன், மேட்டூர் நகர மன்றத் தலைவர் சந்திரா, மேட்டூர் நகர மன்ற முன்னாள் தலைவர் துபாய் கந்தசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி, வெங்கடாஜலம் முருகேசன், ஈஸ்வரி மற்றும் செல்வி உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் விவசாயிகளும் திரளாக பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.