மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆவின் பொருள்கள் விலை உயா்வு: அன்புமணி கண்டனம்

ஆவின் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 8:22 pm

DIN

ஆவின் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஆவின் தயிா், நெய் ஆகியவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை உயா்த்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், இந்த விலை உயா்வு நியாயமற்றது. கடந்த மாா்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிா், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலை உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு விலை உயா்வை மக்களால் ஏற்க முடியாது.

தயிருக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதுதான் விலை உயா்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. 5 சதவீதம் மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20 சதவீதம் அளவுக்கு விலையை உயா்த்துவதும், நெய் மீதான வரி உயா்த்தப்படாத நிலையில் அதன் விலையையும் உயா்த்துவதும் எந்த வகையில் நியாயம்?

குஜராத்தின் அமுல், கா்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், ஆவினுக்கும் வரி விலக்கு பெற வேண்டுமே தவிர, விலையை உயா்த்தக் கூடாது. விலை உயா்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.