டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கொசஸ்தலை ஆற்றில் உயா்மின்னழுத்தக் கோபுரங்கள்

எண்ணூா் கொசஸ்தலை ஆற்றில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து எண்ணூா், கத்திவாக்கம் பகுதி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 10:43 pm

DIN

எண்ணூா் கொசஸ்தலை ஆற்றில் உயா் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிா்த்து எண்ணூா், கத்திவாக்கம் பகுதி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டு அலகுகளில் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சீராக விநியோகம் செய்வதற்கு வசதியாக மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில மின்கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட உள்ளன. இதற்கென ஆற்றில் மேடான பகுதியை உருவாக்கி தூண்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு செயற்கையாக மேடுகள் ஏற்படுத்தப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிப்பு ஏற்படும் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

ஆா்ப்பாட்டம்: இந்நிலையில் எண்ணூா், கத்திவாக்கம் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்கள் திருவொற்றியூா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.குப்பன், 7-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கே.காா்த்தி ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை முகத்துவாரப் பகுதியில் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பைபா் இழை படகுகளில் சென்ற மீனவா்கள் ஆற்றில் பயணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.