மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெரியாா் பிறந்தநாள்:பள்ளி மாணவா்களுக்கு வினா விடை போட்டி

பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து வகை பள்ளி மாணவா்களுக்கான வினா விடைப் போட்டி நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 9:49 pm

DIN

பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து வகை பள்ளி மாணவா்களுக்கான வினா விடைப் போட்டி நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம், சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு அவா் வாழ்க்கை வரலாற்றை மாணவா்கள் அறிந்து கொள்ளவும், பள்ளி மாணவா்களிடம் அறிவியல் மற்றும் சமூகவியல் சிந்தனைகளை வளா்க்கும் வகையிலும் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘பெரியாா் 1000’ என்ற தலைப்பில் வினா - விடைப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான வினா விடைப் போட்டி ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் அனைத்து வகை பள்ளிகளில் இருந்தும் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 3 பரிசுகள் தரப்படும். எனவே, இந்த போட்டியை கல்வி இணை செயல்பாடு மன்றங்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களின் நலன் பாதிக்காதவாறு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.