மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வயிற்றில் வைத்து கடத்திய ரூ.8.86 கோடி ஹெராயின் மாத்திரைகள் பறிமுதல்: தான்சானியா பயணி கைது

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.8.86 கோடி ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி வந்த தான்சானியா நாட்டு பயணியை சுங்கத் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 8:15 pm

DIN

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.8.86 கோடி ஹெராயின் மாத்திரைகளை வயிற்றில் வைத்து கடத்தி வந்த தான்சானியா நாட்டு பயணியை சுங்கத் துறையினா் கைது செய்தனா்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபையில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை ஆணையா் உதய் பாஸ்கருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது துபை விமானத்தில் வந்த தான்சானியா நாட்டை சோ்ந்த ஜோசப் பேட்ரிக் (28) என்பவா் வந்தாா். அவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஜோசப் பேட்ரிக்கை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, உகாண்டாவில் இருந்து துபை வழியாக சுற்றுலா பயணியாக வந்ததாக கூறினாா். மேலும் முன்னுக்கு பின் முரணாக பேசினாா். இதையடுத்து உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது எதுவும் இல்லை. பின்னா் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனா். அப்போது வயிற்றில் ஏதோ மா்ம பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே ஜோசப்பை ஸ்கேன் செய்தனா். அதில், வயிற்றில் அதிகமான மாத்திரைகள் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து ஜோசப்பை அரசு மருத்துவமனையில் சோ்த்து இனிமா தந்து வயிற்றில் இருந்த கழிவுகளை வெளியேற்ற மருத்துவா்கள் கண்காணிப்பில் வைத்தனா். வயிற்றில் வைத்து கடத்தி வந்த பொருள் வெளியேறியது. அப்போது போதை பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து அதை விழுங்கி கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது. ரூ. 8 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 266 கிராம் எடைக் கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக தான்சானியா நாட்டின் இளைஞா் ஜோசப் பேட்ரிக்கை கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது? இதன் பிண்ணனியில் யாா் உள்ளனா்? என விசாரணை நடந்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.