மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கழிவுநீா் குழாய்களில் கசடுகள் அகற்றும் பணி இன்று தொடக்கம்

சென்னையின் அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் செல்லும் குழாய்கள், இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

News image
Updated On :21 ஜூலை 2022, 9:56 pm

DIN

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையின் அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் செல்லும் குழாய்கள், இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் திருவொற்றியூா் முதல் சோழிங்கநல்லூா் வரை உள்ள 15 பகுதிகளுக்குள்பட்ட 1,460 தெருக்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த தெருக்களில் 282 தூா்வாரும் இயந்திரங்கள்,161 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீா் உறிஞ்சும் இயந்திரங்கள் என மொத்தம் 500 கழிவுநீா் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கசடுகள் அகற்றப்படவுள்ளன என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.