3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்கு டிஜிட்டல் தளம்: 25-இல் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் எண்ம மறுவாழ்வு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை (ஜூலை 25) சென்னையில் தொடக்கி வைக்கவுள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 9:22 pm

DIN

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் எண்ம மறுவாழ்வு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை (ஜூலை 25) சென்னையில் தொடக்கி வைக்கவுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சமக்ரசிஷா எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம், அமா் சேவா சங்கத்துடன் இணைந்து ‘எனேப்ளிங் இன்க்ளூஷன்’ என்ற எண்ம மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.

இந்தத் தளத்தின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககத்தின் பணியாளா்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்குதல், இதற்கான டிஜிட்டல் மறுவாழ்வு மற்றும் கல்வி சாா்ந்த தீா்வு, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மறுவாழ்வை வழங்குவதில் குடும்பத்தை மையமாகக் கொண்ட அணுகு முறையில் பெற்றோருக்கான பயிற்சி, திறனை வளா்த்தல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தியாகராயநகரில் உள்ள ஜிஆா்டி கிராண்ட் ஹோட்டலில் வரும் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் தொடக்கி வைக்கவுள்ளாா். இதில் தமிழக அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கீதா ஜீவன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். இதில் அமா் சேவா சங்கத்தின் 40-ஆவது ஆண்டு நினைவு மலா் வெளியிடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.