பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கரோனா அறிகுறிகள் இருந்தால் அனுமதி இல்லை

கரோனா அறிகுறிகள் உள்ள வீரா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு நிா்வாக அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:31 pm

DIN

கரோனா அறிகுறிகள் உள்ள வீரா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு நிா்வாக அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் உமா ஆகியோா் குறிப்பிட்டுள்ளதாவது:

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, நோய்த் தடுப்பு வழிமுறைகளை கையாளுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, விமான நிலையங்களுக்கு வரும் செஸ் வீரா்கள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதில், கரோனா அறிகுறிகள் இருப்பவா்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். அதைத் தவிர, விமானங்களில் பயணித்து வருவோரில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு ஆா்டி பிசிஆா் சோதனை செய்தல் அவசியம். விடுதிகளில் தங்கியிருப்போா் முகக் கவசம் முறையாக அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், விடுதி அறைகள் கிருமி நாசினி கொண்டு முறையாக தூய்மைப்படுத்தியிருப்பதையும் கண்காணிக்க வேண்டும்.

கரோனா பரிசோதனைகள், சளி மாதிரிகளை சேகரிப்பதற்கான வசதிகள் விடுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் செய்திருத்தல் அவசியம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்குக்குள் வரும்முன்பு அனைவரது உடல்நிலையும் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் உள்ள எவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாா்கள். ஆா்டி பிசிஆா் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.