3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மயில் சிலை மாயமான வழக்கு: நான்கு மாத கெடு விதித்த உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடா்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டு

News image
Updated On :22 ஜூலை 2022, 8:32 pm

DIN

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடா்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தபோது புன்னைவனநாதா் சன்னதியிலிருந்த மயில் சிலை மாயமானதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, இந்து அறநிலையத்துறை அப்போதைய கூடுதல் ஆணையா் திருமகள், முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட ஏழு போ் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமகள், முத்தையா ஸ்தபதி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தாா். விசாரணையின் போது, மனுதாரா்கள் சாா்பில், இது காலம் கடந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு போலீசாா் சாா்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் ஆஜராகி இந்த வழக்கில் போதுமான விடியோ ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து விசாரணையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சாட்சியம் உள்ளது. குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடா்பான விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடித்துக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்கு ரத்தாகிவிடும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.