மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் ஆசிரியா்களுக்கு ஊதிய மானியம்: அரசு உத்தரவு

 தமிழகத்தில் 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்குவதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:25 pm

DIN

 தமிழகத்தில் 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்குவதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்: மனவளா்ச்சி குன்றியோருக்கு கற்பிக்க 200 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கான ஊதிய மானியமாக ஆண்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.1.80 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.60 கோடி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிதாக 34 தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 100 சிறப்பு ஆசிரியா்கள், தசைப் பயிற்சியாளா்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.1.68 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.