சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வரவுள்ளார்.
இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிவடைந்தவுடன், ஆளுநர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அப்போது பிரதமரை சந்திக்க இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களது சந்திப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதையும் படிக்க | கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விருந்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர், இபிஎஸ் - ஓபிஎஸை சந்திக்க நேரம் ஒதுக்குவாரா? நேரம் ஒதுக்கினால் ஒன்றாக சந்திப்பாரா? இல்லை தனித்தனியாக சந்திப்பாரா? என்ற பல கேள்விகளுக்கு மாலை பதில் தெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து: இளைஞர் மீது வழக்குப் பதிவு!

உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!

இந்தியர்கள் நல்ல நடிகர்கள்; ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! - அமெரிக்க நிதியமைச்சர் பேச்சு!

போர் எதிரொலி! பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

