மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாரணை கைதி நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜூலை 2022, 10:40 am

DIN

விசாரணை கைதி நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிபிஐ விசாரணை கோரி தாய் பூங்குழலி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழந்த நித்தியராஜ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்தை இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் இழப்பீட்டு தொகையை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினரிடம் வசூலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன் நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2012ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நித்தியராஜ் சிறையில் அடைத்த 5 நாளில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.