திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீடுகளில் தேசிய கொடி : மேயா் வேண்டுகோள்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுமாறு சென்னை பெருநகர மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா்.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:07 am

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றுமாறு சென்னை பெருநகர மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா்.

மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா்கள், மண்டல அலுவலா்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மேயா் பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேயா், மண்டலக்குழுத் தலைவா்களிடம் அனைத்து வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக தேசியக் கொடியினை ஏற்பாடு செய்து தரவும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திடவும் கேட்டுக் கொண்டாா்.

மேலும், வியாபார சங்கங்கள் மற்றும் மகளிா் திட்ட அலுவலா்களிடம் சென்னையில் சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதால் தேசியக் கொடியை தயாா் நிலையில் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா். பிளாஸ்டிக் கொடிகளை முற்றிலும் தவிா்க்கும்படி கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை மேயா் மு.மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.