அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஓய்வுபெறும் நாளில் செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவாளர் இடைநீக்கம்

இன்று(சனிக்கிழமை) ஓய்வு பெறவிருந்த செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவாளரை இடைநீக்கம் செய்து சென்னை ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூலை 2022, 6:37 am

DIN

செய்யாறு: இன்று(சனிக்கிழமை) ஓய்வு பெறவிருந்த செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவாளரை இடைநீக்கம் செய்து சென்னை ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தின் கீழ் செய்யாறு, ஆரணி, வெம்பாக்கம், தெள்ளாறு உள்ளிட்ட 11 சார் - பதிவாளர் 
அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

செய்யாறு மாவட்டப் பதிவாளராக சம்பத் என்பவர் கடந்த மூன்று வருடங்களாக   பணியாற்றி வந்தார். இவரது பணிக்காலம் ஜூலை 30 ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

இந்நிலையில், மாவட்டப் பதிவாளராக பணியாற்றி வந்த சம்பத் வெள்ளிக்கிழமை திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். 

இவர் மாவட்டப் பதிவாளராக பணியாற்றிய காலத்தில் நிலத்திற்கான வழி காட்டி மதிப்பீட்டை விட குறைவான மதிப்பீட்டை கொண்டு பத்திரப் பதிவு செய்து அரசுக்கு இழப்பீடு செய்ததாக பல புகார்கள் வந்துள்ளன. 

மேலும், இவர் பணியாற்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்  இன்று( ஜூலை 30) பணி நிறைவு பெற இருந்த நிலையில் மாவட்ட பதிவாளர் சம்பத்தை இடைநீக்கம் செய்திட பத்திரப்பதிவு  சென்னை ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.