

தமிழகத்தின் பல மாவட்டங்களில் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே கரோனா காலத்தில் பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்
இந்த ஆய்வின் அடிப்படையில், 11-ம் வகுப்பைச் சேர்ந்த 417 பேரும், 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரும், 9-ம் வகுப்பு மாணவிகள் 37 பேரும், 10-ம் வகுப்பு மாணவிகள் 45 பேரும், 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேரும் என மொத்தம் 511 மாணவிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமான மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.