தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி பலி

திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள்.

News image

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான கணவர் அண்ணாதுரை மனைவி சிநேகவல்லி .

Updated On :12 ஜூன் 2022, 6:55 am

திருவாடனை: திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல் பன்னையூர் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கனவின் கணவன் மனைவி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே இருவரும் பலியானார்கள்.

திருவாடானை அருகே பாசானி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50), அவரது மனைவி சிநேகவல்லி (45) ஆகிய இருவரும் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் பாசாணி கிராமத்திலிருந்து ஆர்.எஸ் .மங்கலம் அருகே உள்ள அளவிடங்கான்  கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருக்கும் போது மேல் பன்னையூர் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அண்ணாதுரையும் அவரது மனைவி சிநேகவல்லியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Story image

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்.

தகவலறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.