பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து

சென்னைக்கு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :16 ஜூன் 2022, 12:19 pm

DIN


சென்னை: சென்னைக்கு அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தனியார் பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு, தனியார் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகத்துக்கு தமிழக இந்துசமய அறநிலையத் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த விவகாரத்தில், பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் நோட்டிஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நில உரிமையாளர் விவகாரம் நில நிர்வாக ஆணையர் முன் நிலுவையில் இருக்கும் போது நோட்டீஸ் அனுப்பியது தவறு என்று கூறி, இந்துசமய அறநிலையத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதசுவாமி கோயில் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 21.06 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசாா்ட்டை நடத்தி வருகிறது.

1998-இல் குத்தகைகாலம் முடிவடைந்தும் நிலத்தை தொடா்ந்து பயன்படுத்தி வந்ததால், ரூ.1.08 கோடி இழப்பீடாகச் செலுத்தும்படி, பொதுபோக்கு பூங்கா நிா்வாகத்துக்கு முதலில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கோயில் நிலத்தில் இருக்கும் பொழுதுபோக்குப் பூங்காவை காலி செய்யுமாறு இந்துசமய அறநிலையத் துறை கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.