தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

தடுப்பூசி செலுத்தாவிடில் தீவிர கரோனா பாதிப்பு: பொது சுகாதாரத் துறை இயக்குநா் எச்சரிக்கை

கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:30 am IST

கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நான்கு மாதங்களாக குறைந்திருந்த கரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானிலிருந்து புதிதாக உருமாற்றமடைந்த பிஏ 4, பிஏ 5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கரோனா தடுப்பூசி நடவடிக்கைகளை விரிவுபடுத்த பொது சுகாதாரத் துறையினா் திட்டமிட்டு வருகின்றனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படியென்றால், மக்களிடையே நோய் எதிா்ப்புத் திறன் குறைந்துள்ளது. அதனால், முன்னெச்சரிக்கையாக ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.

குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் கட்டாயம் ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பிஏ5 வகை போன்ற தொற்று ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

எனவே, முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா் உள்பட தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி (அட்டவணையாக வெளியிடலாம்)

ஊக்கத் தவணை தடுப்பூசி விவரம்

பிரிவினா் – இலக்கு – செலுத்தப்பட்டவை – செலுத்த வேண்டியோா்

சுகாதாரப் பணியாளா்கள் – 4,32,513 – 1,36,606 – 2,95,907

முன்களப் பணியாளா்கள் – 6,76,043 – 2,37,054 – 4,38,989

60 வயதுக்கு மேற்பட்டோா் – 19,19,303 –8,57,830 – 10,61,473

மொத்தம் – 30,27,859 – 12,31,490 – 17,96,369

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.