வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான வழக்குக்கு இடைக் காலத் தடை

கோயில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

Updated On :25 ஜூன் 2022, 3:36 am IST

கோயில் திருப்பணி என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக யுடியூபா் காா்த்திக் கோபிநாத்துக்கு எதிரான காவல்துறை விசாரணைக்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

பெரம்பலூா் மாவட்டம் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளரும், யுடியூபருமான காா்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவா் தாக்கல் செய்திருந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தனிப்பட்ட கணக்கு விவரங்களை வங்கியிடம் கேட்டுள்ளதாகவும் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதிப்பதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.