லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரளத்தில் ராகுல் காந்தி அலுவலகம் மீது தாக்குதல்: சு. திருநாவுக்கரசர் கண்டனம்

ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளாா். 

News image
Updated On :25 ஜூன் 2022, 12:29 pm

DIN

ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கேரளாவில் வயநாட்டில் உள்ள தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை எஸ்எப்ஐ அமைப்பைச் சார்ந்த வன்முறையாளர்கள் சிலர் அடித்து உடைத்து நாசப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது அராஜகமானது. அக்கிரமமான செயல். மாநில ஆட்சியாளர்களின் துணையோடு மத்திய பாஜக அரசை மகிழ்ச்சி அடைய செய்து அதன்மூலம் தங்களை காப்பாற்றிக்கொள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் சிலர் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக அந்த அமைப்பைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, அங்கு மலைப்பகுதிகளில் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் (எஸ்எஃப்ஐ) வெள்ளிக்கிழமை பேரணி சென்றனா். 

அப்போது சுமாா் 100 போ் வரை எம்.பி. அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்தை சூறையாடினா். இதில் தொடா்புடைய 19 பேரை போலீஸாா் இதுவரை கைது செய்துள்ளனா். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து கேரளம் முழுவதும் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்ட பேரணிகள் நடத்தினா். பல இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவற்றை காங்கிரஸாா் சேதப்படுத்தினா். 

இதையடுத்து, தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையகத்துக்கு வெளியே கூடுதல் பாதுகாப்புக்காக காவலா்கள் குவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.