மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் நாளை( மார்ச்-3) முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-3) காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்கண்காணிப்பார்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பின், மார்ச்-5 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையடுத்து அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மார்ச் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், பட்ஜெட்டில் அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.