மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுடன் முதல்வர் நாளை(மார்ச்-3) ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் நாளை( மார்ச்-3) முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் நாளை( மார்ச்-3) முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-3) காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  காவல்கண்காணிப்பார்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

பின், மார்ச்-5 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. 

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையடுத்து அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. 

மார்ச் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், பட்ஜெட்டில் அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல்  உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com