அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாமளாபுரம் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட பழனிசாமி என்பவர் சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

News image
பழனிசாமி
Updated On :4 மார்ச் 2022, 8:55 am

DIN

திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட பழனிசாமி என்பவர் சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சாமளாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், 15 ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சீட் கேட்டிருந்தார்.

ஆனால், அந்த வார்டு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து பழனிசாமி நீக்கப்பட்டார்.

இந்த நிலையில்,சாமளாபுரம் பேரூராட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருந்தனர். இதில், 15 ஆவது வார்டில் போட்டியிட்ட பழனிசாமி திமுக வேட்பாளரை விட 53 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், திமுக சார்பில் 5 ஆவது வார்டில் வெற்றி பெற்ற வேலுசாமி பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பழனிசாமியும், திமுக சார்பில் வேலுசாமியும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தத் தேர்தலில் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர். பழனிசாமிக்கு 8 வாக்குகளும், வேலுசாமிக்கு 6 வாக்குகளும் கிடைத்ததுடன், ஒரு வாக்கு செல்லாதவை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக பழனிசாமி வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.