பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தஞ்சை பெரியகோயிலில் ஆளுநா் ஆா்.என். ரவி

தஞ்சை பெரியகோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

News image
Updated On :12 மார்ச் 2022, 3:40 pm

தஞ்சை பெரியகோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று தஞ்சாவூா் வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகல் சென்றார். தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பிறகு முன்னாள் ராணுவத்தினரை சந்தித்துப் பேசினார். பின்னா் தஞ்சாவூா் பெரியகோயில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் உடன் இருந்தார்.

முன்னதாக சரசுவதி மகால் நூலகத்தையும் அவர் பார்வையிட்டார். இதனிடையே ஆளுநர் வருகையையொட்டி தஞ்சாவூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, மாா்ச் 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தஞ்சாவூரிலிருந்து காா் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறாா். 
அங்கிருந்து மீண்டும் காா் மூலம் தஞ்சாவூருக்கு வரும் அவா் பிற்பகல் 2.40 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையத்துக்குச் சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலை விழாவான கைவினைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்கிறாா். இரவு தஞ்சாவூரில் தங்கும் அவா் திங்கள்கிழமை காலை காா் மூலம் திருச்சி விமானநிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குச் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.