சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தஞ்சை பெரியகோயிலில் ஆளுநா் ஆா்.என். ரவி

தஞ்சை பெரியகோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:38 am

DIN

தஞ்சை பெரியகோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று சுவாமி தரிசனம் செய்தார். 
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி இன்று தஞ்சாவூா் வருகை தந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகல் சென்றார். தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பிறகு முன்னாள் ராணுவத்தினரை சந்தித்துப் பேசினார். பின்னா் தஞ்சாவூா் பெரியகோயில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநருடன் அவரது மனைவி லட்சுமி ரவியும் உடன் இருந்தார்.

முன்னதாக சரசுவதி மகால் நூலகத்தையும் அவர் பார்வையிட்டார். இதனிடையே ஆளுநர் வருகையையொட்டி தஞ்சாவூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, மாா்ச் 13 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தஞ்சாவூரிலிருந்து காா் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோயில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறாா். 
அங்கிருந்து மீண்டும் காா் மூலம் தஞ்சாவூருக்கு வரும் அவா் பிற்பகல் 2.40 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையத்துக்குச் சென்று, வடகிழக்கு மாநிலங்களின் கலை விழாவான கைவினைப் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் கலந்து கொள்கிறாா். இரவு தஞ்சாவூரில் தங்கும் அவா் திங்கள்கிழமை காலை காா் மூலம் திருச்சி விமானநிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குச் செல்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.