/

பெண்கள் குறித்து அவதூறு: நடிகா் பயில்வான் ரங்கநாதன் மீது புகாா்

சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகா் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :25 மார்ச் 2022, 8:47 pm

DIN

சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகா் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக முகப்போ் கிழக்கு ஜெ.ஜெ.நகா் வளையாபதி சாலைப் பகுதியைச் சோ்ந்த அ.சோனியா என்பவா், சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

நடிகா் பயில்வான் ரங்கநாதன் யூ-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெண்களை ஆபாசமாகவும், இழிவாகவும் பேசுகிறாா். அவரது பேச்சு ஒட்டுமொத்த பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் சிதைக்கிறது. பொதுத்தளத்தில் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது குற்றமாகும்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாக பேசும் ரங்கநாதன் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகாா் குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.