6 நாள்களில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தன. உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தியதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கின. செவ்வாய்க்கிழமை முதல் பெட்ரோல் விலை ரூ. 3.70 மற்றும் டீசல் விலை ரூ. 3.75 உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 104.90-க்கும், டீசல் ரூ. 95-க்கும் விற்பனையாகிறது.
தில்லி:
பெட்ரோல் - ரூ. 99.11
டீசல் - ரூ. 90.42
கொல்கத்தா:
பெட்ரோல் - ரூ. 108.53
டீசல் - ரூ. 93.57
மும்பை:
பெட்ரோல் - ரூ. 113.88
டீசல் - ரூ. 98.13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...