டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சீர்காழியில் பழைமையான வேப்பமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

News image
சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
Updated On :1 மே 2022, 7:55 am

DIN

சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.
 
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது. இதனால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Story image

சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்த பழமையான வேப்பமரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர்.

அப்பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த டீக்கடையில் முன்பு இருந்த   வேப்பமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் டீக்கடை பக்கவாட்டு சுவர் மற்றும் தரை தளம் சேதம் ஏற்பட்டது. டீக்கடை உரிமையாளர், டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள்  துரிதமாக அவ்விடத்திலிருந்து தப்பியோடியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். 

வேரோடு சாய்ந்த வேப்பமரம் சுமார் 15 அடி தூரத்திற்கு சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து பாதித்தது. சாலையின் குறுக்கே மரம் விழுந்த போது காலை நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Story image

வேரோடு சாய்ந்த பழமையான வேப்பமரத்தை  வெட்டி அகற்றும் பணியில்  மீட்புப் பணி வீரா்கள்

இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் பணி வீரா்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த வேப்ப மரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.