ரமலான் பண்டிகையையொட்டி பாகிஸ்தான், வங்கதேச ராணுவ வீரர்களுடன் இந்திய வீரர்கள் செவ்வாய்கிழமை இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதி எல்லைகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானையொட்டிய இந்தியாவின் மேற்குப் பகுதியில் 3,323 கிலோமீட்டர் தூரத்திற்கும், வங்கதேசத்தையொட்டிய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 4,096 கிலோமீட்டர் தூரத்திற்கும் முக்கிய இடங்களில் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி பாகிஸ்தான் வங்கதேச எல்லை வீரர்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். அதேபோன்று இந்திய வீரர்களுக்கும் அவர்கள் இனிப்புகளை பரிசாக அளித்தனர்.
சர்வதேச எல்லையான வாகா எல்லை உள்பட, சாம்பா, கதுவா, ஆர்.எஸ்.புரா, அக்நூர் ஆகிய எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் ரமலான் பண்டிகையையொட்டி இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
எல்லைகளில் இருதரப்புகளிடையே இணக்கமான மற்றும் அமைதியான சூழல் ஏற்பட இதுபோன்ற நிகழ்வுகள் பெரிதும் துணைபுரிவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


