வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்திய கண்காணிப்பு குழுவினர்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை கண்காணிப்பு குழுவினர் 5 பேர்  திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர்.

News image
தேக்கடி படகு துறையிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு செய்ய சென்ற கண்காணிப்பு குழுவினர்.
Updated On :9 மே 2022, 9:17 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த புதிய 2 உறுப்பினர்களை, சேர்த்து  கண்காணிப்பு குழுவினர் 5 பேர்  திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர்.

பருவ காலநிலை மாறுபாடுகளான மழை மற்றும் வெயில் காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை பற்றி உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது, தற்போது கூடுதலாக 2 பேரை நியமித்துள்ளது.

திங்கள்கிழமை கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணையகத்தின், அணைகள் பாதுகாப்பு குழுவின் முதன்மை பொறியாளருமான குல்ஷன் ராஜ்  தலைமையில்,  தமிழக அரசு தரப்பில் நீர்வள துறையின் கூடுதல் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழு  தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு தரப்பில் நீர்ப்பாசனத்துறை கூடுதல் செயலாளர் டி.கே. ஜோஸ், முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் தேக்கடி படகுத் துறைக்கு வந்தனர்.

அங்கிருந்து படகு மூலம் பிரதான அணை, பேபி அணை, சுரங்க பகுதி, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.