

நூல் விலை உயர்வை தடுக்கக் கோரி தமிழக எம்.பி.க்கள் குழு புதன்கிழமை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.
நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தில் உள்ள பின்னலாடை தொழில்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களின் எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் நாளை தில்லி செல்லவுள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து நெசவாளர்கள் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.