சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கும் நிலையில், செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.
விடுதலை செய்யப்பட்டதையடுத்து வாழ்த்துக் கூறிய முதல்வர் ஸ்டாலினிடம், தனது விடுதலைக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தமைக்காக பேரறிவாளன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்த வழக்கில் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி, மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.