ஒரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி என பேரறிவாளன் விடுதலை வழக்கு குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆளுநர் முடுவெடுக்காமல் காலதாமதம் செய்து வருவதை எதிர்த்து பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிக்க | மன்னிப்புடன் ஆரம்பித்து நன்றியுடன் முடித்த அற்புதம்மாள்
இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வெளியானது. பேரறிவாளனை விடுதலை செய்து வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி.. @ArputhamAmmal …. Best wishes #Perarivalan #PerarivalanRelease
— G.V.Prakash Kumar (@gvprakash) May 18, 2022
இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சுட்டுரைப் பதிவில், “ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி” எனப் பதிவிட்டு தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.