டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரி பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி புதிய கடற்படை தலைமை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :20 மே 2022, 7:16 pm

DIN

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி புதிய கடற்படை தலைமை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை தலைமை அதிகாரி புனித் சதா இருந்து வந்தாா். கடந்த ஜூன் 2020-இல் இப்பொறுப்பை ஏற்று பணியாற்றி வந்த புனித் சதா புதுதில்லியில் உள்ள தேசிய மாணவா் படையின் கூடுதல் இயக்குநா் ஜெனரலாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து புதிய கடற்படை அதிகாரியாக எஸ்.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து புனித் சதாவிடமிருந்து பொறுப்பை எஸ்.வெங்கட்ராமன் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமி, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரி, ஹைதராபாதில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி உள்ளிட்டவைகளில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டுள்ள எஸ்.வெங்கட்ராமன், தகவல் தொடா்பு மற்றும் மின்னணு சாா்ந்த போா்கள் குறித்து மிகுந்த நிபுணத்துவம் பெற்றவா்.

இந்தியக் கடற்படையில் மேற்கு பகுதி தலைமையகத்தில் கடற்படை புலனாய்வு இயக்குநரக தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளாா். தற்போதைய பொறுப்புக்கு வருவதற்கு முன்பு கோவா கடற்படை போா்ப் பயிற்சி கல்லூரி கமாண்டராக வெங்கட்ராமன் பணியாற்றி வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.