மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: மே 24ல் மறியல் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து திட்டமிட்டபடி மே 24 இல் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என சனிக்கிழமை போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மானாமதுரையில் வைகையாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்துவது தொடர்பாக போராட்டக் குழுவினர் பங்கேற்ற கூட்டம்.









