கருணாநிதி சிலை நாளை திறப்பு: நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
கருணாநிதி சிலை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.


கருணாநிதி சிலை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
சென்னை, ஓமந்தூராா் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவச் சிலையை, குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வரும் சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் (மே 28) திறந்து வைக்கிறாா்.
இதன்பின்பு, கலைவாணா் அரங்கத்தில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுகிறாா்.
திமுக பொதுச் செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வரவேற்றுப் பேசவுள்ளாா். கருணாநிதி சிலை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...