சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமரை மதித்திருக்க வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை மதித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை கொடுத்துவிட்டார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

News image
பிரதமரை மதித்திருக்க வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்
Updated On :27 மே 2022, 9:22 am

DIN


சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை மதித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை கொடுத்துவிட்டார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இவ்விழாவில் முன்னிலை வகித்து உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், நாட்டின் பிரதமராக தான் நரேந்திர மோடி இங்கு வந்தார். பாஜகவின் நிகழ்ச்சிக்காக வரவில்லை. போட்டி அரசியலா? இங்கு நடக்கிறது. நேரு விளையாட்டரங்கத்தில் நடந்தது போட்டி அரசியலா?

பிரதமருக்கு என்று ஒருமரியாதை உள்ளது. எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, பிரதமரை மதித்திருக்க வேண்டும். நிச்சயமாக முதல்வர் செய்திருப்பது சரித்திர தவறு.. சரித்திர பிழை. தமிழக அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியை கொடுத்துவிட்டு முதல்வர் சென்றிருக்கிறார். இதையெல்லாம் மக்கள் கேட்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட, பாஜக அரசியலில் நிற்கும்.

முதல்வர் பேசிய ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு தகவலுக்கும் பதில் கொடுக்கப்படும். கச்சத்தீவை கொடுத்த நீங்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.

இதனைக் கண்டித்து வரும் 31ஆம் தேதி பாஜக சார்பில்  கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.