திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாளை முதல் டெல்டா மாவட்டங்களில்  முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 

News image
முதல்வர் ஸ்டாலின்
Updated On :29 மே 2022, 9:51 am

DIN


சென்னை: கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 

இந்த ஆய்வின்போது டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை முதல்வர் பார்வையிடுகிறார். இதற்காக, நாளை திங்கள்கிழமை காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு செல்ல உள்ளார். 

அன்று புதுக்கோட்டையில் 3 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். 

நாளை மறுநாள் நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 

சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.