ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே கடந்த வாரம் கடல்பாசி சேகரிக்கச் சென்ற ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா். இதேபோல, அண்மையில் சென்னை மயிலாப்பூரில் தொழில் அதிபா், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ஆயிரம் சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடா்பாக நேபாளத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மற்றொருவா் என இருவா் கைது செய்யப்பட்டனா்.