தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் கடையில் தீ: பொருள்கள் நாசம்

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்தில், பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் கடையில் தீ: பொருள்கள் நாசம்
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்தில், பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பெரியசாமி என்பவர்  பூஜைப் பொருள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாராம். 

இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலையில் கடைத் தீப்பிடித்து எறிந்ததாம்.  இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இத்தீவிபத்தில் கடையில் உள்ள அனைத்து பூஜைப் பொருள்கள் மற்றும் கொலு பொம்மைகள் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து  மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com