டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மணலியில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு : ஒருவா் கைது

சென்னை மணலி சி.பி.சி.எல்., நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை வியாழக்கிழமை போலீசாா் மீட்டனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:50 pm

DIN

சென்னை மணலி சி.பி.சி.எல்., நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை வியாழக்கிழமை போலீசாா் மீட்டனா். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அந்தோணி என்ற யுவராஜை (55) போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மணலி சிபிசிஎல் நகரில் சுமாா் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்தக்

கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடிச் செல்லப்பட்டிருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

இதுகுறித்து, மணலி காவல் நிலைய போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், திருவொற்றியூா் பகுதியில் பதுங்கி இருந்த அந்தோணியை புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், ஐம்பொன் சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டாா். அவா் பதுக்கி வைத்திருந்த சிலைகளையும் போலீஸாா் மீட்டு வழக்குப் பதிவு செய்தனா். கைது செய்யப்பட்ட அந்தோணியை பொன்னேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.