எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போடி: டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

போடி அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள்  வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
Updated On :3 நவம்பர் 2022, 9:10 am

DIN



போடி: போடி அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள்  வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடி மேலச்சொக்கநாதபுரத்தில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு தனியாக விடுதி போடி சிலமலை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடையும் அமைந்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைக்கு வருகின்றவர்கள் மது அருந்திவிட்டு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுடன் தகராறு செய்து தாக்கி விடுகின்றனர்.

மேலும், இப்பகுதியில் கூச்சலிட்டு மாணவர்களுக்கு இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க இப்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மாணவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் வியாழக்கிழமை அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த போடி தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் மற்றும் போலீசார், பேராசிரியர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.